எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Thursday, November 24, 2011

எதிர்காலம்

நிமிடங்களின் ஆதிக்கம்
கடந்து போகும் ஒவ்வொரு நொடியும்
சுமத்திவிட்டுப் போகும் பாரங்கள் ..
எதிரே தெரியும் பூதாகரத்தை
எதிர்கொள்ளத் துணிவின்றி
உடைந்து நொறுங்கிவிட்ட ஒரு இதயம்.
பேச்சிழந்து,..
பெருமூச்சுக்கள் மட்டும்
வெப்பத்தை வெளியாக்கும்.
இருண்ட காட்டினுள்
ஆந்தைகள் அலறும் சப்தங்களாய்
பயமுறுத்தும்
அடர்த்தியான மர்மம்.
பதில் சொல்லத் தெரியாமல்
வெறித்துப் பார்க்கும்
மௌனங்கள்.
பிரித்துப் பார்க்க முடியாத
பின்னல்களுக்குள்
முடிந்து வைக்கப் பட்டிருக்கிறது
என் எதிர்காலம்.

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன