எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Tuesday, September 25, 2012

நீ ஜெயித்திடு

இளையவனே, ஒரு சேதி கேளடா.
உலகமிது உன் காலின் கீழடா.
அதை உதைத்திடு, நீ ஜெயித்திடு.
உன் மனபலம் கொதித்திடும் போது
இந்த பூமியே உனக்கொரு கோது.
நீ ஜெயித்திடக் கிளர்ந்தெழும் போது
கரும் பாறைகள் சின்னத் தூசு.

காட்டு மூங்கிலாய் நீ உயரு.
ஊற்றுத் தண்ணீரென நீ பெருகு.
நேற்று  நடந்ததை  தூரம்  வைத்து
வேற்றுக் கிரகங்களில் பாதம் வை.
தனக்குத் தானே பாதை போட்டு
தலை நிமிர்ந்து போகும் நீரோட்டம் போல்,
உனக்கு நீயே பாதை போட்டு
உயர்ந்து பறந்து நிலவில் இறங்கு.
அந்த வானம் போல
நீயும் கூட
போடாதே உனக்கு  எல்லைக் கோடு.

கற்பகத் தருவாய் நிழல் கொடு.
கற்பனைக்கும்  கொஞ்சம்  இடம்  கொடு.
தர்மம் ஜெயிக்க குரல்  கொடுத்திடு.
தாய்மண்ணைக்  காத்திட  உயிர்  கொடு.
கொத்தாய்  விதைகள்  சுமந்த  போதும்
குனிந்தே  நிற்கும் நெற்கதிர் போல
எத்தனை உயரம்  போனாலும்  நீ
மண்ணின்  மகன்தான்  விழுந்து  வணங்கு.
உன்னை  நிமிர்ந்து பார்த்து
சல்யூட்  செய்து
இமயம்  பாடும்  வெற்றிக்  கீதம். 








Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன