எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Sunday, September 23, 2012

அனடோமிக் தெரபி - செவி வழி தொடு சிகிச்சை

உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறதா?, இனிப்பு சாப்பிடுங்கள். இரத்த அழுத்தம் இருக்கிறதா?, உப்பு சாப்பிடுங்கள் என்று சொன்னால் என்னை உதைப்பீர்களா?. இதோ சொல்லுகிறார்  Healer's Baskar  அவர்கள். அனடோமிக் தெரபி - செவி வழி தொடு சிகிச்சை என்ற நூலில், நாம் சரியென்று பின்பற்றிக் கொண்டிருக்கும் பல்வேறு சிகிச்சை முறைகளையும் நடைமுறைகளையும் பிழையென்று நிரூபிக்கிறார். இந்த செவி வழி தொடு சிகிச்சை மூலம் சகல விதமான நோய்களையும் குணப்படுத்த முடியுமென்று விளக்குகிறார். இந்த சிகிச்சை முறையில் மருந்து மாத்திரை கிடையாது, பத்தியங்கள் (உணவுக் கட்டுப்பாடுகள்) கிடையாது. தனது உரையை கேட்டுக் கொண்டிருப்பதன் மூலமாகவே நோயைக் குணப்படுத்திவிட முடியுமென்று உறுதியளிக்கிறார். அப்படியென்ன பேசப் போகிறார் என்று கேட்க ஆவலாயிருக்கிறதல்லவா?. இதே ஆவலோடுதான் நானும் அந்தப் புத்தகத்தை படிக்கத் தொடங்கினேன்.

இந்த
நூலில் நமக்கு ஏற்படக் கூடிய பல்வேறு நோய்கள் பற்றிய ஒரு ஆழமான பார்வையின் மூலம் அந்த நோய் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணங்கள் அலசி ஆராயப்படுகிறது. தும்மல் முதல் AIDS வரை, ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய சகல நோய்களுக்குமான காரணங்கள் ஒரு பச்சைக் குழந்தைக்கு சொல்வது போல் சொல்லப்பட்டிருக்கிறது.
நம்மில் பெரும்பாலானோர் நமக்கு என்ன நோய் வந்திருக்கிறது, எதனால் வந்திருக்கிறது என்று அறிந்து கொள்ளாமலேயே ஏராளமான மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் சுகயீனம் என்று வைத்தியரிடம் சென்றால், வைத்தியர் என்ன செய்கிறார்?. என்ன வருத்தம் என்று கேட்கிறார். நாம் தடிமன் என்றோ தலைவலி என்றோ ஒரு வருத்தத்தை சொல்கிறோம். உடனே தன் கழுத்தில் மாட்டியிருக்கும் ஒரு கருவியை காதுகளுக்குள் மாட்டி மறுமுனையை நம் முதுகிலும் நெஞ்சிலும் வைத்து மூச்சை இழுத்து விடச் சொல்கிறார். நாமும் ஆழ்ந்து மூச்சிழுக்கிறோம். அதன் பிறகு ஒரு காகிதச் சீட்டை எடுத்து கரகரவென்று ஏதோ கிறுக்குகிறார். இந்த மருந்துக்கு சரியாகாவிட்டால் 3 நாட்களுக்கு பிறகு மறுபடியும் வரச் சொல்கிறார். அவர் எழுதுவதை 3 நாட்களுக்குப் பிறகு அவராலேயே வாசிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.
அந்தக் காகிதத்தை மருந்தகத்தில் கொடுத்தால் சாப்பாட்டுக்குப் பின் என்றும், முன் என்றும் ஒரு ஏழெட்டு உறைகளைக் கொடுப்பார்கள். அந்தக் காகிதத்தில் எழுதப்பட்ட மருந்தைத்தான் அவர்கள் கொடுக்கிறார்களா அல்லது அது போன்ற எழுத்துக்களுடைய வேறு ஏதேனும் மருந்து கொடுக்கப்படுகிறதா என்று யாருக்கும் தெரியாது. நமக்கு என்ன வருத்தம் இருக்கிறது, இது எதனால் வந்தது, இது வேறு ஏதாவது வருத்தத்துக்கான அறிகுறியா, இது எப்போது குணமாகும் என்று எதுவும் நமக்குத் தெரியாது. அந்தக் கழுத்தில் மாட்டியிருக்கும் கருவியினால் செய்த சோதனையின் மூலம் அவர்கள் அறிந்துகொண்டது என்னவென்று இதுவரை எந்த வைத்தியரும் நமக்குச் சொன்னதுமில்லை.
இப்படி, மருத்துவத் துறை ஒரு இரகசியத் துறையாய் மிளிர்ந்து கொண்டிருக்கும் பொழுது, Healer's Baskar அவர்களின் Anatomic Therapy என்ற நூல் ஒவ்வொரு நோய் பற்றியும் மிக ஆழமாகவும் அகலமாகவும் அலசுகிறது. அவர் நமது உடலை பல உறுப்புகளாக பிரித்து நோக்கவில்லை. மனித உடலானது பல கோடிக்கணக்கான செல்களினால் கட்டமைக்கப்பட்டது என்ற அடிப்படையில் அவருடைய அலசல் அமைகிறது. இந்த ஆழமான அலசலின் பின், நம் உடலில் ஏற்படக்கூடிய சகலவிதமான நோய்களுக்குமான காரணங்களாக 5 காரணங்களை முன்வைக்கிறார். நமக்கு ஏற்பட்ட நோய்க்கான காரணத்தைக் கண்டறிந்து, அந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்யும்போது அந்த நோய் காணாமல் போய்விடுகிறது என்று விபரிக்கிறார். 
Healer's Baskar  அவர்கள், அந்த நூலில் நாம் திடுக்கிடக்கூடிய ஆச்சரியமான பல விஷயங்களைச் சொல்கிறார். உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறதா, நிறைய இனிப்புப் பலகாரங்கள் சாப்பிடுங்கள் என்கிறார். உங்களுக்கு இரத்த அழுத்தம் இருக்கிறதா, உப்பு சாப்பிடுங்கள் என்கிறார். சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் என்றெல்லாம் நோய்களே இல்லை என்கிறார். அறுசுவை உணவை திகட்டும்வரை உண்ணுங்கள் என்கிறார். தண்ணீரை கொதிக்கவைத்து குடிக்க வேண்டாம் என்கிறார். காய்ச்சல் வந்தால் பாயாசம் வைத்து பக்கத்து வீடுகளுக்கெல்லாம் கொடுத்து சந்தோஷத்தைப் பரிமாறுங்கள் என்கிறார். இவற்றையெல்லாம்விட மிக மிக ஆச்சரியமானது என்னவென்றால், இந்த விடயங்களையெல்லாம் அவர் மிக மிகத் தெளிவாக விளக்கி அவற்றை ஏற்றுக்கொள்ள வைத்து நமக்கு அறிவு புகட்டுவதுதான்.
இதே நூலில் நமக்கு ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து மருந்து மாத்திரையில்லாமல் குணமாகக் கூடிய வித்தையை மிக எளிதாகக் கற்றுத் தருகிறார். பாமரன் கூடப் புரிந்துகொள்ளக்கூடிய மிக எளிய தமிழில் எளிய உதாரணங்களின் மூலம் மிக சிக்கலான உயிரியல் விடயங்களை விளக்கியிருப்பது இந்த நூலின் கூடுதல் சிறப்பு.
படிக்கத் தொடங்கினால் இடையில் நிறுத்த மனமில்லாமல் தொடரக்கூடிய ஒரு மருத்துவ நூல் இது. நூலாசிரியர் கூட இந்த நூலை அங்கங்கே கொஞ்சம் கொஞ்சமாக படிக்காமல் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தொடர்ச்சியாக படிக்குமாறு வேண்டுகிறார்.
இத்தனை பொக்கிஷமான நூலை படிக்கவேண்டுமென்ற ஆர்வம் உங்களுக்கு ஏற்படுகிறதல்லவா?. இந்த நூலின் மென்பிரதியை பெற்றுக்கொள்ள www.anatomictherapy.org  என்ற வலைத்தளத்திற்கு சென்று அங்கே Free Book Downloads என்ற tab ல் Anatomic Tamil pdf Book Free Download என்ற பட்டனை அழுத்தி தரப்பட்டிருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் பெயர், முகவரி போன்ற தகவல்களை அனுப்புங்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அதன் pdf வடிவம் அனுப்பி வைக்கப்படும். 
இப்படியொரு அருமையான நூலைத் தந்தமைக்காக Healer's Baskar  அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நூலைப் பின்பற்றி அனைவரும் ஆரோக்கியமாய் வாழ பிரார்த்திக்கிறேன்.

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன