எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Friday, May 20, 2011

'ஏடி கள்ளச்சி' பாடல்- ஒரு அழகான இசையனுபவம்

அண்மைக் காலத்தில் எனக்கு மிக மிகப் பிடித்த ஒரு பாடல் தான் தென்மேற்குப் பருவக் காற்று திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஏடி கள்ளச்சி' பாடல். இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் இன்னும் இன்னும் கேட்டுக்கொண்டிருக்கவே  தோணுகிறது. அப்படியொரு அற்புதமான பாடல் இது. என் மனதை மிகவும் கொள்ளை கொண்டு விட்டது.
இந்தப் பாடலின் இசையில்தான் நான் முழுவதுமாக மயங்கிப் போனேன். இந்த இசையில் திளைக்கும்   போதெல்லாம் இதயத்தில் தேன் சுரக்கிறது. பாடலின் வரிகள் மிகவும் அருமை. பாடகர்களான விஜய்பிரகாஷ் மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோரின் குரலில் அப்படியே மூழ்கிக் கிடக்கலாம் போலிருக்கிறது. இப்படியாக இந்தப் பாடலின் ஒவ்வொரு அம்சமும் அப்படியே அணுவணுவாக அனுபவிக்க வைக்கிறது.
இந்தப் பாடலின் பாடலாசிரியருக்கு அதாவது என் பேரபிமானத்துக்கும் மரியாதைக்குமுரிய  கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு  தேசிய விருது கிடைத்ததையிட்டு நான் மிகவும் மகிழ்ந்து போயிருக்கிறேன். அது அவருக்கே உரித்தான  விருது. அவருக்கு வாழ்த்துக்கள் ஆயிரம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
வார்த்தைகளே புரியாமல் தாம் தூம் இசையில் தமிழ்ப் பாடல்கள் குத்துயிராய் ஒலிக்கின்ற இந்தக் காலத்தில் இப்படியான அற்புதமான பாடல்களை கேட்கும்போது தமிழும் இசையும் ஒருபோதும் தாழ்ந்து போகாது என்ற நம்பிக்கை பிறக்கிறது. இந்தப் பாடலுக்காக உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்.
தமிழ் சினிமா உலகத்திலிருந்தும், இசைக் கலைஞர்களிடமிருந்தும் இப்படியான மனநிறைவான பாடல்களை இன்னுமின்னும் எதிர்பார்க்கிறேன்.

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன