எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Sunday, August 7, 2011

உருகி வடியும் வலிகள்


இறுகிப் பிணைந்த
உயிர்ப்பிணைப்பின்
மயிரிழை வெடிப்புக்களுக்குள்ளிருந்து
ஒழுகி விழுகின்ற
கண்ணாடித் துளிகள்
கண்களுக்கு எட்டாத
இருதயத்தின் 
நிர்மலமான இருட்டிற்குள்
உடைந்து விழுகின்றன.

ஆர்ப்பாட்டமில்லாத
தனிமைகளில்
செலவழிக்கப்படாமலிருக்கும் கணங்களின்
உயிர்த்துடிப்புகளை
அந்த உடைதல்களின் 
கீறல்கள்
வலி செய்கின்றன.

மௌனம் மறைத்துக்கொண்டிருக்கும்
அந்தகாரத்தின் கொடூரங்களுக்குள்
ஒரு ஆத்மாவின் கதறல்கள்
துடிக்கத் துடிக்கப்
புதைக்கப்பட்டிருக்கின்றன.

உருகி வடியும் வலிகளின்
விழுப்புண்களாய்,
இன்னமும்
துடைக்கப்படாத ஈரங்களுக்குள்
சேகரித்து  வைத்திருக்கும்
வியர்வைத் துளிகளின் வாசனை
நெஞ்சுக்குள்
பற்றிப் பரவி
ஒரு ஜீவராகத்தின்
ஸ்வரங்களை மீட்டிக்கொண்டு
பட்டை பட்டையாய்
படர்ந்திருக்கிறது. 

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன