எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Monday, October 17, 2011

விழி நீரில் ஒரு ராகம்

வேறாரும் பேசாத பாஷை  இது
போராடும்  குயிலொன்றின்  ஓசை   இது
என்   மூச்சுக்   குழலில்
மூழ்கிப்போன
காற்றின்   கானம்   இது...
இன்று
மூக்கு   நுனியில்
முடிந்த பிறகு
தேம்பும்   ராகம்   இது...
விழி   நீரில்  ஒரு   கோலம் ...
விதி  போடும்  அடையாளம் ...

வேர்கள் பிரிந்தாலும் மண்ணில்
சிறு  நார்கள்  நெழிந்தோடுமே ...
மூச்சு  பிரிந்தாலும் தேகம்
சிறு  சூட்டில்  உயிர்  தாங்குமே ...
அறுந்திடும் உறவினில்
விழுந்திடும் ஈரமே....
பிரிந்திடும் வேளையில்
நெருங்கிடும் தூரமே.... - இது
எரிந்து முடிந்த மூங்கில் கரியில்
கசிந்து வழியும் இசையோ....

வானம் பொழிகின்ற துளியில்
மன ஊனம் அழிகின்றதே....
கார்மேகம் திசை மாறும் போது
வெறும்  காற்று புயல் வீசுதே ...
பழகிய சூரியன்
மறைந்திடும் நேரமே....
அழகிய வானவில்
கரைந்திடும் சோகமே .... - இது
உதிர்ந்து  விழுந்த மலரின் நினைவில்
அழுத கொடியின் குரலோ ....

Post Comment

3 comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன