நீள்கடலின் கரையோரம்
நீந்தி விளையாடும்
ஒரு நண்டு,
தொலைதூர நிலவோடு
தூளியாடும்
முகில் ஒன்று,
அரும்போடு கதைபேசி
விருந்துண்ணும்
இளவண்டு,
நந்தவனக் காற்றோடு
நகையாடும்
தளிர் ஒன்று,
இவைபோல இன்னும்பல
நினைவோடு மாறாமல்
நிழலாகிக் கூட வர,
நெடும்பயணச் சுமைகளிலே
ஒடுங்கிவிழும் கண்ணீர்த்
துளியொன்றின் சுடும் ஈரம்
காற்றிலே காய்ந்து போகும்.
நீந்தி விளையாடும்
ஒரு நண்டு,
தொலைதூர நிலவோடு
தூளியாடும்
முகில் ஒன்று,
அரும்போடு கதைபேசி
விருந்துண்ணும்
இளவண்டு,
நந்தவனக் காற்றோடு
நகையாடும்
தளிர் ஒன்று,
இவைபோல இன்னும்பல
நினைவோடு மாறாமல்
நிழலாகிக் கூட வர,
நெடும்பயணச் சுமைகளிலே
ஒடுங்கிவிழும் கண்ணீர்த்
துளியொன்றின் சுடும் ஈரம்
காற்றிலே காய்ந்து போகும்.
No comments:
Post a Comment
மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன