எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Sunday, July 17, 2011

பிரிவுச் சுமை

நீள்கடலின் கரையோரம்
நீந்தி விளையாடும்
ஒரு நண்டு,

தொலைதூர நிலவோடு
தூளியாடும்
முகில் ஒன்று,

அரும்போடு கதைபேசி
விருந்துண்ணும்
இளவண்டு,

நந்தவனக் காற்றோடு
நகையாடும்
தளிர் ஒன்று,

இவைபோல இன்னும்பல
நினைவோடு மாறாமல்
நிழலாகிக் கூட வர,

நெடும்பயணச் சுமைகளிலே
ஒடுங்கிவிழும் கண்ணீர்த்
துளியொன்றின்  சுடும்  ஈரம்
காற்றிலே காய்ந்து போகும்.

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன