எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Thursday, May 19, 2011

தூது செல் காற்றே..

காற்றே  கொஞ்சம்  வருவாயா ?
என்  இமையை  மெல்லத்  திறப்பாயா ?
கண்ணில்  மிதக்கும்  கனவுகளை 
என்  காதலன்  விழிக்குள்  புதைப்பாயா ?

பேதை  நெஞ்சின்  காதலினை 
நாயகனிடத்தில்  உரைப்பாயா ?
நாவினால்  மறுத்தவன்  உரைத்தாலும் -என் 
சாவிற்கு  அழைத்ததாய்  சொல்வாயா ?

ஈரமான  நினைவுகளை 
இனிக்க  இனிக்கத்  தந்தவனே -நெஞ்சில் 
பாரமான  சுமையாகி -எனை 
பைத்தியம்  ஆக்கினான்  அறிவாயா ?

ஊண்  உறக்கம்  மறந்துவிட்டு 
உயிர்தேடி  அலைந்ததுவும் ,
நிம்மதியைத்  தொலைத்துவிட்டு 
நித்திரைக்காய்ப்  புரண்டதுவும்,

எதை எதையோ  இழந்துவிட்டு 
அவன் நினைவால்  வாடியதும்,
எடுத்தவனிடத்தில்  உரைப்பாயா ?
என்  உயிரை  மீட்டுக்  கொடுப்பாயா ?

அவன்  விட்டுச்சென்ற  சுவாசக்காற்றை 
என்  சுவாசப்பையில்   திணிப்பாயா ?
காற்றே  உன்னை  கெஞ்சுகிறேன் .
ஈதென்  கடைசி  ஆசை  செய்வாயா ?

2002

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன