வேறாரும் பேசாத பாஷை இது
போராடும் குயிலொன்றின் ஓசை இது
என் மூச்சுக் குழலில்
மூழ்கிப்போன
காற்றின் கானம் இது...
இன்று
மூக்கு நுனியில்
முடிந்த பிறகு
தேம்பும் ராகம் இது...
விழி நீரில் ஒரு கோலம் ...
விதி போடும் அடையாளம் ...
வேர்கள் பிரிந்தாலும் மண்ணில்
சிறு நார்கள் நெழிந்தோடுமே ...
மூச்சு பிரிந்தாலும் தேகம்
சிறு சூட்டில் உயிர் தாங்குமே ...
அறுந்திடும் உறவினில்
விழுந்திடும் ஈரமே....
பிரிந்திடும் வேளையில்
நெருங்கிடும் தூரமே.... - இது
எரிந்து முடிந்த மூங்கில் கரியில்
கசிந்து வழியும் இசையோ....
வானம் பொழிகின்ற துளியில்
மன ஊனம் அழிகின்றதே....
கார்மேகம் திசை மாறும் போது
வெறும் காற்று புயல் வீசுதே ...
பழகிய சூரியன்
மறைந்திடும் நேரமே....
அழகிய வானவில்
கரைந்திடும் சோகமே .... - இது
உதிர்ந்து விழுந்த மலரின் நினைவில்
அழுத கொடியின் குரலோ ....
போராடும் குயிலொன்றின் ஓசை இது
என் மூச்சுக் குழலில்
மூழ்கிப்போன
காற்றின் கானம் இது...
இன்று
மூக்கு நுனியில்
முடிந்த பிறகு
தேம்பும் ராகம் இது...
விழி நீரில் ஒரு கோலம் ...
விதி போடும் அடையாளம் ...
வேர்கள் பிரிந்தாலும் மண்ணில்
சிறு நார்கள் நெழிந்தோடுமே ...
மூச்சு பிரிந்தாலும் தேகம்
சிறு சூட்டில் உயிர் தாங்குமே ...
அறுந்திடும் உறவினில்
விழுந்திடும் ஈரமே....
பிரிந்திடும் வேளையில்
நெருங்கிடும் தூரமே.... - இது
எரிந்து முடிந்த மூங்கில் கரியில்
கசிந்து வழியும் இசையோ....
வானம் பொழிகின்ற துளியில்
மன ஊனம் அழிகின்றதே....
கார்மேகம் திசை மாறும் போது
வெறும் காற்று புயல் வீசுதே ...
பழகிய சூரியன்
மறைந்திடும் நேரமே....
அழகிய வானவில்
கரைந்திடும் சோகமே .... - இது
உதிர்ந்து விழுந்த மலரின் நினைவில்
அழுத கொடியின் குரலோ ....
3 comments:
superb
@ சார்வாகன் : Thank u..
Nice
Post a Comment
மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன