மங்கிக்கிடந்த
என் வானத்துக்கு
பௌர்ணமி விளக்கை
ஏற்றி வைத்தவன்
நீதானடா…..
கண்ணா,..
ஊமைக்குழலாய்
ஒதுங்கிக் கிடந்தவளை
புல்லாங்குழலாக்கி
புதுமை செய்தவனும்
நீதானடா..
அங்கேயும் இங்கேயும்
சிதறிக்கிடந்த
என் அரிச்சுவடியைக் கோர்த்து
என்னை ஒரு
கவிதையாய் நெய்தவனும்
நீதானடா…
வெறும் கல்லாய்த்தான்
விழுந்து கிடந்தேன்.
உன் அன்பென்னும்
உளிகொண்டு
என்னையொரு
சிற்பமாக்கி சிறப்பித்தவனும்
என்னுயிரே,
நீதானடா….
2011
என் வானத்துக்கு
பௌர்ணமி விளக்கை
ஏற்றி வைத்தவன்
நீதானடா…..
கண்ணா,..
ஊமைக்குழலாய்
ஒதுங்கிக் கிடந்தவளை
புல்லாங்குழலாக்கி
புதுமை செய்தவனும்
நீதானடா..
அங்கேயும் இங்கேயும்
சிதறிக்கிடந்த
என் அரிச்சுவடியைக் கோர்த்து
என்னை ஒரு
கவிதையாய் நெய்தவனும்
நீதானடா…
வெறும் கல்லாய்த்தான்
விழுந்து கிடந்தேன்.
உன் அன்பென்னும்
உளிகொண்டு
என்னையொரு
சிற்பமாக்கி சிறப்பித்தவனும்
என்னுயிரே,
நீதானடா….
2011
No comments:
Post a Comment
மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன