ஒரு புல்லாங்குழல் எழுகிறது -அது
பூவின் காதில் விழுகிறது
மெல்லப் பூவும் அசைகிறது
அந்த மெல்லிசையில் தேன் கசிகிறது.
வண்டும் சுற்றி வளைக்கிறது
வடிவாய்த் தேனை சுவைக்கிறது
புள்ளினம் பாடிப் பறக்கிறது
புவனம் கண்ணைத் திறக்கிறது
இதயம் மெல்லத் துடிக்கிறது
இமையும் மடலை விரிக்கிறது
கனவின் வடிவில் ஓர் கவிதை
கவலைச் சுமையைப் பறிக்கிறது.
புதிதாய் உலகம் பிறக்கிறது
புணையும் பண்ணில் மிதக்கிறது
சடமும் இசையால் உயிர்க்கிறது
சுகமும் சுவையும் துளிர்க்கிறது.
இசையில் உலகம் விழிக்கிறது -அந்த
இன்பத் தேனில் குளிக்கிறது.
பகைமை மறந்து சிரிக்கிறது
பனியை அள்ளிக் குடிக்கிறது.
2002
2002
No comments:
Post a Comment
மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன