நாளும் பொழுதும் மாறும்.
நாகரீகம் மாறும்.
ஏட்டில் இலக்கணம் மாறும்.
ஏழைக் கண்ணீர் மாறும்.
காற்றின் திசைகள் மாறும்.
காலைப்பூக்கள் நிறம் மாறும்.
பருவங்கள் மாறும்.
பகலும் இரவும் மாறும்.
எண்ணங்கள் ஏதேதாய் மாறும்.
ஏகாந்தம் சுகமாயும் மாறும்.
விஞ்ஞானம் மாறும்.
விண்மீன்கள் இடம் மாறும்.
பூகோளம் தடம் மாறும்.
பூமியின் எடை மாறும்.
கடலின் ஆழம் மாறும்.
காற்றின் அழுத்தம் மாறும்.
வானத்தின் நீலம் மாறும்.
வானிலவின் வெளிச்சம் மாறும்.
வையகத்தின் வெப்பம் மாறும்.
வைகை நதி கொள்கை மாறும்.
நேரத்தின் வேகம் மாறும்.
நெடுவானம் துரும்பாய் மாறும்.
குடிசைகள் கோபுரமாய் மாறும்.
குப்பைக் கிடங்கு குளங்களாய் மாறும்.
மழைநீரின் துளியொன்று முத்தாக மாறும்.
மரியாதைக்கேனும் வார்த்தைகள் மாறும்.
காலத்தின் போக்கோடு மாறாமை மாறும்.
மாற்றங்கள் கூட பலவிதமாய் மாறும்.
மாற்றங்கள் மட்டும் இல்லையென்றால்
வாழ்க்கை பழந்தயிராய் புளித்து நாறும்.
No comments:
Post a Comment
மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன