எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Sunday, July 31, 2011

அழகிய இளமைக் காலம்

கனவுகள்  பருகும்  காலம்

கவிதையில்  உருகும்  காலம்


மனதினுள் அருவியொன்று 

 
மடைதிறந்  தோடும்  காலம்


 

விழிகளில்  மீன்கள்  நீந்தும் 

வழிகளில்  மான்கள்  ஓடும் 


துறு துறு வென்று நெஞ்சு


தேடலில் தொலையும்  காலம்



அறிவுரை  வெறுக்கும் காலம்


ஆணைகள் உடைக்கும் காலம்


எதிரியும்  நண்பனென்று


உறவிலே துய்க்கும் காலம்



மனதினுள்  பட்டாம்  பூச்சி 


சிறகுகள்  விரிக்கும் காலம்


மலரினை மேயும் வண்டை 


மகிழ்வுடன் ரசிக்கும்  காலம்



கிளைகளில் காற்று ஏறும்


அசைவிலே  கரையும் காலம்


குயில்களின்  பாட்டு  பரவும் 


திசைகளில் உறையும் காலம்



இதழிலே  நகைகள்  ஏற்றி 


இமைகளில்  அமிர்தம்  ஊற்றி  


மழையிலே  நனைந்துகொண்டே 


நகர்ந்திடும்  இளமைக் காலம்

Post Comment

2 comments:

Anonymous said...

அறிவுரை வெறுக்கும் காலம்

ஆணைகள் உடைக்கும் காலம்

எதிரியும் நண்பனென்று

உறவிலே துய்க்கும் காலம்

good and real .My next poem heading The samme...
Vetha.Elangathilakam.
http://kovaikkavi.wordpress.com

RIPHNAS MOHAMED SALIHU said...

Thank u... And let me know when u do it..

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன