எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Sunday, July 10, 2011

உன் பார்வையில்...........


ஒரே ஒரு
பார்வைக் கீற்றைத்தான்
நீ வீசி விட்டுப் போனாய்.
அந்தச்
சூரியனே
என் கண்களுக்குள்
சுருண்டுவிட்டதுபோல்
எத்தனை வெளிச்சம்
என் விழிகளுக்கு!!

பொங்கிப் பூரிக்கிறது
என் வாலிபம்.

ஆயிரம் வார்த்தைகளில்
வடிக்க முடியாததை
உன் அரை நொடிப் பார்வை
அடித்துச் சொல்கிறது.

நீயென்ன
தீக்குச்சியையா
உரசிவிட்டிருக்கிறாய் 
உன் கண்களிலே?
ஒரு தீப்பிழம்பே
எரிகிறதே
எனக்குள்ளே.

உன் பார்வைத் தீயின்
கனலில்
என் காதல் உலை
கொதிக்கிறது.

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன