நிச்சயமற்ற
எல்லைக் கோடுகள்
நிரந்தரமற்ற
நலிந்த உறவுகள்
எங்கேயும் முடியலாம் என்று
தொடர்கின்ற பயணங்கள்
இறக்கிவிட மனமின்றி
விரும்பியே ஏற்றிக்கொண்ட
கனமான சுமைகள்
கைக்கெட்டாத் தூரத்தில்
தலைகீழாய்த் தொங்கும்
அந்தர நொடிகள்
வாயிருந்தும்
வார்த்தைகளுமிருந்தும்
எதிர்க்கருத்துச் சொல்லாத
தன்மானமற்ற மௌனங்கள்
எதையுமே சரியென்று
ஏற்றுக்கொண்ட பக்குவங்கள்
ஊரார் அறியாமல்
உள்ளுக்குள் அரங்கேறும்
ஒப்பாரிப் பாடல்கள்
பிரயாசைப்பட்டு
விழி மூடும் நேரம்
இரவுகளைப் பயமுறுத்தும்
பூதக் கனவுகள்
எத்தனையோ நினைவுகள்
இருள் படிந்த காட்சிகள்
இரும்பிலே வார்த்த
எலும்புக்கூடுகளாகி
கழுத்தை நெரிக்கும் போதும்,
இழவு பார்த்த கண்ணீர்
உருகி விழாமல்
இறுகிக் கனக்கிறது
இதயத்துக்குள்.
எல்லைக் கோடுகள்
நிரந்தரமற்ற
நலிந்த உறவுகள்
எங்கேயும் முடியலாம் என்று
தொடர்கின்ற பயணங்கள்
இறக்கிவிட மனமின்றி
விரும்பியே ஏற்றிக்கொண்ட
கனமான சுமைகள்
கைக்கெட்டாத் தூரத்தில்
தலைகீழாய்த் தொங்கும்
அந்தர நொடிகள்
வாயிருந்தும்
வார்த்தைகளுமிருந்தும்
எதிர்க்கருத்துச் சொல்லாத
தன்மானமற்ற மௌனங்கள்
எதையுமே சரியென்று
ஏற்றுக்கொண்ட பக்குவங்கள்
ஊரார் அறியாமல்
உள்ளுக்குள் அரங்கேறும்
ஒப்பாரிப் பாடல்கள்
பிரயாசைப்பட்டு
விழி மூடும் நேரம்
இரவுகளைப் பயமுறுத்தும்
பூதக் கனவுகள்
எத்தனையோ நினைவுகள்
இருள் படிந்த காட்சிகள்
இரும்பிலே வார்த்த
எலும்புக்கூடுகளாகி
கழுத்தை நெரிக்கும் போதும்,
இழவு பார்த்த கண்ணீர்
உருகி விழாமல்
இறுகிக் கனக்கிறது
இதயத்துக்குள்.
No comments:
Post a Comment
மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன