எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Thursday, July 21, 2011

அனுபவம் புதிது

பழகிய இடம்,
பழகிய முகம்,
பழகிய மொழி,
ஒன்றும் புதிதில்லை.

தழுவிச் செல்லும் காற்று,
தகதகக்கும் வானம்,
புழுதி மண்ணின் வாசம்,
புகை குடிக்கும் மேகம்,
இதுவரைக்கும் இங்கே
எதுவுமே புதிதில்லை.

உன் சுவாசம் பட்டபோது,...

என்னைக் குறுக்கிட்ட
கனவுகள் புதிது.
என்மேல் நெருப்பிட்ட
உணர்வுகள் புதிது.
என்னைத் தாலாட்டும்
ராகங்கள் புதிது.
என்னை நீராட்டும்
ஈரங்கள் புதிது.

என் இளமைக் கடப்பலை
கடந்து போகும் உன் நிழல்கள்
தெழித்துவிட்டுப் போகும்
பன்னீர் வாசனை புதிது.

இதயத்தின் மென்சுவரை
இமைகளால் நீவிவிடும்
சுகமான காதலின்
சுவை ரொம்பப் புதிது.

எங்கேயோ தொலையிருந்தும்
எதிர்பாரா தருணங்களில்
நினைவுகளை இழுத்தணைத்து
இதழ் பதித்து அனுப்பிவைக்கும்
உன் இதமான சேஷ்டைகள்
இன்னும் இன்னும் புதிது.

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன