எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Tuesday, July 26, 2011

உண்மை அழியாது

புன்னகையில்
ஒழித்தாலும்,
 
பூணாரம்  போட்டு 
மறைத்தாலும்,

பூமிக்கடியில் 

புதைத்தாலும்,

புனல்  கடலில்  
கரைத்தாலும்,
 
காலங்கள் 
மறந்தாலும்,

என்றைக்கோ  துப்பிய  
விதையொன்று
மாரி மழைக்கு
மொல்லென்று   
முழைப்பதுபோல்,
 
பொய்யின்  கோதை
கிழித்துக்கொண்டு,

தக்க சமயத்தில்
சட்டென்று
வந்து  நிற்கும்
அழியாத  உண்மை.

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன