என் நிழல்களே
என்னை விட்டு
விலகியோடுவதுபோல்
ஒரு பிரம்மை
என் கூடு
என் கண்ணெதிரேயே
உடைந்து போவதாய்
ஒரு காட்சி .
என் உறவுகள்
என்னை விட்டு
ரொம்ப தூரம்
விலகி நிற்பதாய்
ஒரு தோற்றம் .
என் கைகளிலிருந்து
எல்லாமே
நழுவிப் போகின்றன.
நான்,
வெறுமையாகிறேன்.
விருப்பு வெறுப்புக்களோ
கோப தாபங்களோ
எதுவுமே இல்லை
என்னிடம்.
வெற்றுடம்பில்
உணர்ச்சிகள் மரத்துப் போன
ஒரு உயிர் மட்டும்
இருக்கிறது
இன்னும் பிரியாமல்.
இருக்கிறது....
வைக்கோலைப் போல
உப்புச் சப்பற்ற
ஓர் ஆத்மா.
வறண்டு,
பாலைவனம் போல
ஓர் ஆத்மா.
போதும் -
இந்த
சுடுகாட்டு ஜீவியம்.
வெகு தூரத்தில்,...
முகம் தெரியாத மனிதர்களுக்கிடையில்
முகமற்றவளாய்
வாழத் தோணுகிறது.
No comments:
Post a Comment
மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன