வண்ண நிலவே ,
நீ வழிதவறிப் போனாயா?
என்றைக்குமில்லாமல் - ஏன்
என் வாசல் நுழைகின்றாய்?
நான்
இருட்டை அணிந்து
நெருப்புக் குளிக்கும் போதெல்லாம்
திரும்பிக்கூடப் பார்க்காமல்
திமிரெடுத்துப் போனாயே,
ஒரு துண்டு மேகத்தையாவது
எனக்குத்
துணைக்கனுப்பினாயா ?
இன்று மட்டும் ஏன்
என் விலாசம் தேடுகிறாய் ?
வேதனைப் பாசியில்
வழுக்கி
விழுந்து விழுந்து
தினம் தினம்
இடுப்பை உடைக்கிறேன்.
என் முகமே
என்னிடமிருந்து
கழன்று விழுந்த பின்
எந்த முகவரிக்குச் சொல்ல
நீ சேதி கொணர்ந்தாய் ?
உன் சேதிக்குச் சக்தியுண்டா
என் எலும்புகளை
ஒட்ட வைத்து - அதில்
வானவில்லைக் கட்டிவைக்க ?
இல்லையென்றால்,.....
வந்த பாதை வழியே
திரும்பிப் பார்க்காமல் ஓடு.
உன்
அரைகுறை முதுகுவருடல்கள்
எனக்கு வேண்டாம்.
ஓடி விடு வெண்ணிலவே,,
நான் கள்ளிமுள் தின்னும்போது
தண்ணீர் எடுத்துக் கொடுக்க
எந்தக் கையும்
எனக்கு வேண்டாம்.
என் தொண்டைக்குழியின்
கிழிசல்களை - உன்னால்
தைத்துவிட முடியாது.
நீ
உன் வழியைப் பார்த்து
ஓடிவிடு வெண்ணிலவே.
நீ வழிதவறிப் போனாயா?
என்றைக்குமில்லாமல் - ஏன்
என் வாசல் நுழைகின்றாய்?
நான்
இருட்டை அணிந்து
நெருப்புக் குளிக்கும் போதெல்லாம்
திரும்பிக்கூடப் பார்க்காமல்
திமிரெடுத்துப் போனாயே,
ஒரு துண்டு மேகத்தையாவது
எனக்குத்
துணைக்கனுப்பினாயா ?
இன்று மட்டும் ஏன்
என் விலாசம் தேடுகிறாய் ?
வேதனைப் பாசியில்
வழுக்கி
விழுந்து விழுந்து
தினம் தினம்
இடுப்பை உடைக்கிறேன்.
என் முகமே
என்னிடமிருந்து
கழன்று விழுந்த பின்
எந்த முகவரிக்குச் சொல்ல
நீ சேதி கொணர்ந்தாய் ?
உன் சேதிக்குச் சக்தியுண்டா
என் எலும்புகளை
ஒட்ட வைத்து - அதில்
வானவில்லைக் கட்டிவைக்க ?
இல்லையென்றால்,.....
வந்த பாதை வழியே
திரும்பிப் பார்க்காமல் ஓடு.
உன்
அரைகுறை முதுகுவருடல்கள்
எனக்கு வேண்டாம்.
ஓடி விடு வெண்ணிலவே,,
நான் கள்ளிமுள் தின்னும்போது
தண்ணீர் எடுத்துக் கொடுக்க
எந்தக் கையும்
எனக்கு வேண்டாம்.
என் தொண்டைக்குழியின்
கிழிசல்களை - உன்னால்
தைத்துவிட முடியாது.
நீ
உன் வழியைப் பார்த்து
ஓடிவிடு வெண்ணிலவே.
2 comments:
arumai...vaalththukkal
Thank u..
Post a Comment
மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன