எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Sunday, July 10, 2011

சுகமே வேண்டும்

எனக்கு 
சோகங்களை 
சுமக்கப் பிடிக்கவில்லை.
சந்தோஷக்  காற்றை  மட்டுமே 
சுவாசிக்கப்  பிடிக்கிறது.

வாழ்க்கை
வரைந்துவைத்த பாதைகளின்
மேடு பள்ளங்களில்
என்னால்
பயணிக்க முடியவில்லை.

பூக்களால் நெய்த
புடவைகளை மட்டுமே
போர்த்துவேன் என்கிறது
உள்ளம்.

வாடிப் போன மலர்களையும்
வற்றிப்போன நதிகளையும்
எட்ட நின்றேனும்
என்னால்
ஏறெடுக்க முடியவில்லை.

என் வாழ்க்கை கோப்பை
சொப்பனப் பானங்களாலேயே
நிரம்ப வேண்டும் என்று
நிர்ப்பந்திக்கிறது மனசு.

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன