எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Sunday, May 15, 2011

நெருக்கடி

சுமக்க முடியாத
சுமைகளுடன்
ஒரு
சிட்டுக்குருவி
தள்ளாடுகிறது.


சிறகுகளே இங்கு
சுமையாயிருக்கும்போது
எப்படி
சிலுவைகளை
சுமந்து செல்வது?


ஒற்றையடிப் பாதையொன்றில்
ஏழெட்டு விமானங்கள்
ஒன்றாகத்
தரையிறங்க வேண்டுமென்றால்
எப்படிச் சாத்தியம்?


எதிலுமே ஒட்டாமல்
விரல்கள்
விலகி நிற்கும் போது
எந்தக் கைகளால்தான்
காவியம் படைக்க முடியும்?


நான்
பின்னிக்கொண்ட
வலைகளில்
நானேதான்
சிக்கிக்கொண்டேன்.


என் விரலே
என் விழியைக்
குத்தும்போது,
இனி -
எந்த விரல் தான்
என் கண்ணீரை
துடைத்துவிட முடியும்?


சுழல்காற்றில்
சிக்கிக்கொண்டன
என் துடுப்புகள்.


கரை சேர
முடியாமல்
தத்தளிக்கிறது
என்
வாழ்க்கை ஓடம்.

2011

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன