எண்ணக்கருக்களுக்குள்
அடக்க முடியாத
எண்ணங்கள்
நெஞ்சில்
அலைமோதுகின்றன.
செய்வது
சரியா என்று
தெரியாத
ஒரு மயக்கத்தில்....
விடையில்லாப் புதிர்போல
ஆயிரம்
கேள்விக்குறிகள் எனக்குள்ளே .
மூச்சுக் காற்று
வெளியாக முடியாமல்
மூச்சுத்திணறி நிற்கிறது.
வாழ்க்கை போடும்
புதிர்களுக்கு
விடை சொல்லத் தெரியாமல்
வார்த்தைகள் ஊமையாகி
மண்டியிட்டுக் கிடக்கின்றன.
பிள்ளைக் கிறுக்கல்கள் போல
எத்தனை கோடுகள்
என் நெஞ்சில்.
புரிந்துகொள்ள முடியவில்லை.
புழுதிக் காற்றில்
புரண்டோடுகிறது
என்
மனக்குதிரை.
2011
அடக்க முடியாத
எண்ணங்கள்
நெஞ்சில்
அலைமோதுகின்றன.
செய்வது
சரியா என்று
தெரியாத
ஒரு மயக்கத்தில்....
விடையில்லாப் புதிர்போல
ஆயிரம்
கேள்விக்குறிகள் எனக்குள்ளே .
மூச்சுக் காற்று
வெளியாக முடியாமல்
மூச்சுத்திணறி நிற்கிறது.
வாழ்க்கை போடும்
புதிர்களுக்கு
விடை சொல்லத் தெரியாமல்
வார்த்தைகள் ஊமையாகி
மண்டியிட்டுக் கிடக்கின்றன.
பிள்ளைக் கிறுக்கல்கள் போல
எத்தனை கோடுகள்
என் நெஞ்சில்.
புரிந்துகொள்ள முடியவில்லை.
புழுதிக் காற்றில்
புரண்டோடுகிறது
என்
மனக்குதிரை.
2011
No comments:
Post a Comment
மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன