விடிகாலைப் பொழுது
விழியில் ஓர் கனவு
அழகான கவிதை
அரங்கேறும் உணர்வு
மேகம் தேடிவந்தென்
வாசலிலே பனிப்பொழிய
சேமம் சொல்லிக்கொண்டு
வீடு செல்லும் வானிலவு
நட்சத்திரம் வந்தென்
முற்றத்திலே பூப்பூக்கும்
நல்லதொரு வீணை
மெல்லியதாய் பா இசைக்கும்
அதிகாலைக் குளிரெந்தன்
இருதயத்தில் பசை தடவும்
அசந்த நித்திரையில்
அரைகுறையாய் குயில் மயக்கும்
அரைத் தூக்கம் கலைந்தபின்னும்
விழி தூங்க அடம் பிடிக்கும்
விலகிய போர்வை நீண்டு
தலை வரைக்கும் பாய் விரிக்கும்
கனவு கலைந்து மீண்டும்
கண்ணயர்ந்து போகையிலே
அயல் கிடக்கும் தொ(ல்)லைபேசி
அலார இடி முழக்கும்
திடுக்கிட்டு உயிர் விழிக்கும்
திகிலொன்றில் மனம் பதைக்கும்
விடிந்துட்டா என்று நெஞ்சு
விடியலை வைது தீர்க்கும்
விழித்திட விழி மறுக்கும்
விழிகளில் துயில் வலிக்கும்
அடுத்ததும் சில நிமிடம்
அசந்திட மனம் அழைக்கும்
திரும்பவும் போர்வை போர்த்தி
விரும்பியே துயில் நடக்கும்
பல மணித் துயிலை விட - அந்தச்
சில நிமிடம் தித்திக்கும்.
விழியில் ஓர் கனவு
அழகான கவிதை
அரங்கேறும் உணர்வு
மேகம் தேடிவந்தென்
வாசலிலே பனிப்பொழிய
சேமம் சொல்லிக்கொண்டு
வீடு செல்லும் வானிலவு
நட்சத்திரம் வந்தென்
முற்றத்திலே பூப்பூக்கும்
நல்லதொரு வீணை
மெல்லியதாய் பா இசைக்கும்
அதிகாலைக் குளிரெந்தன்
இருதயத்தில் பசை தடவும்
அசந்த நித்திரையில்
அரைகுறையாய் குயில் மயக்கும்
அரைத் தூக்கம் கலைந்தபின்னும்
விழி தூங்க அடம் பிடிக்கும்
விலகிய போர்வை நீண்டு
தலை வரைக்கும் பாய் விரிக்கும்
கனவு கலைந்து மீண்டும்
கண்ணயர்ந்து போகையிலே
அயல் கிடக்கும் தொ(ல்)லைபேசி
அலார இடி முழக்கும்
திடுக்கிட்டு உயிர் விழிக்கும்
திகிலொன்றில் மனம் பதைக்கும்
விடிந்துட்டா என்று நெஞ்சு
விடியலை வைது தீர்க்கும்
விழித்திட விழி மறுக்கும்
விழிகளில் துயில் வலிக்கும்
அடுத்ததும் சில நிமிடம்
அசந்திட மனம் அழைக்கும்
திரும்பவும் போர்வை போர்த்தி
விரும்பியே துயில் நடக்கும்
பல மணித் துயிலை விட - அந்தச்
சில நிமிடம் தித்திக்கும்.
4 comments:
நல்லா இருக்கு...திரட்டிகளில் இணையுங்கள் அப்போது தான் பலரை சென்றடையும் உங்கள் கவிதைகள்
!!!
மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கும் ஆலோசனைக்கும் ... மீண்டும் வருக ..
நட்சத்திரம் வந்தென்
முற்றத்திலே பூப்பூக்கும்
நல்லதொரு வீணை
மெல்லியதாய் பா இசைக்கும்
ஆஹா.. வாசிக்கும்போதே அதன் சுகானுபவம் மனசுக்குள்.
திரும்பவும் போர்வை போர்த்தி
விரும்பியே துயில் நடக்கும்
பல மணித் துயிலை விட - அந்தச்
சில நிமிடம் தித்திக்கும்.
நிதர்சனமான வரிகள்
நன்றி நண்பரே... உங்கள் வார்த்தைகள் உற்சாகமூட்டுகின்றன. தொடர்ந்தும் இணைந்திருங்கள்...
Post a Comment
மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன