எல்லாமும்
முடிந்து போன பின்னும்
மௌனம் மட்டும்
கை கட்டி நிற்கிறது.
சில நேரங்களில்
மௌனம் ஆயுதமாய் மாறி
அழித்திருக்கிறது
சில பல எதிர்ப்புகளை.
பல நேரங்களில்
வெண்புறாவாயும்
சிறகை
விரித்திருக்கிறது.
பல தடவை
பலரிடமும்
மெல்லச் சிரித்து
பல பேரின் மனங்களை
வலை போட்டு
இழுத்திருக்கிறது.
எங்கெங்கிருந்தோ
வீசப்பட்ட
அக்கினிச் சொற்களையெல்லாம்
மௌனம்
தன் உஷ்ணத்தால்
சுட்டு எரித்திருக்கிறது.
இன்று,
முதன் முறையாக
தற்காப்பு ஆயுதமாகி
மார்பை துளைக்கவந்த
மனித வெடிகுண்டுகளிடமிருந்தும்
என்னை
காப்பாற்றி
கரை சேர்த்திருக்கிறது.
இப்போதெல்லாம் .....
மௌனம்
தன் தன்மானத்தை
துறந்துவிட்டு
என் வாழ்வில்
நிம்மதி விளக்கேற்ற
அகிம்சையால் ஒரு
ஆயுதம் தரிக்கிறது.
முடிந்து போன பின்னும்
மௌனம் மட்டும்
கை கட்டி நிற்கிறது.
சில நேரங்களில்
மௌனம் ஆயுதமாய் மாறி
அழித்திருக்கிறது
சில பல எதிர்ப்புகளை.
பல நேரங்களில்
வெண்புறாவாயும்
சிறகை
விரித்திருக்கிறது.
பல தடவை
பலரிடமும்
மெல்லச் சிரித்து
பல பேரின் மனங்களை
வலை போட்டு
இழுத்திருக்கிறது.
எங்கெங்கிருந்தோ
வீசப்பட்ட
அக்கினிச் சொற்களையெல்லாம்
மௌனம்
தன் உஷ்ணத்தால்
சுட்டு எரித்திருக்கிறது.
இன்று,
முதன் முறையாக
தற்காப்பு ஆயுதமாகி
மார்பை துளைக்கவந்த
மனித வெடிகுண்டுகளிடமிருந்தும்
என்னை
காப்பாற்றி
கரை சேர்த்திருக்கிறது.
இப்போதெல்லாம் .....
மௌனம்
தன் தன்மானத்தை
துறந்துவிட்டு
என் வாழ்வில்
நிம்மதி விளக்கேற்ற
அகிம்சையால் ஒரு
ஆயுதம் தரிக்கிறது.
2 comments:
மௌனத்தின் சிறப்பு!!
ஆம்.. மௌனம் பல பிரச்சினைகளுக்கு தீர்வாகிறது.
Post a Comment
மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன