எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Sunday, July 24, 2011

காதலில் விழுந்தேன்

பூவொன்று கண்முன்னே
நிற்கக் கண்டேன்.
புரியாமல்  தடுமாறி 
விக்கித்து  நின்றேன்.
ச்சீ என்று  விரட்டிவிட 
எண்ணித் தோற்றேன். 
சிலாகிக்கும் அசைவுகளில்
தொலைந்து போனேன்.

மீன்போல விழியிரண்டும்
மோகனங்கள் பாடிவர
தேன் கொண்ட பூவிதழ்கள்
சோபனங்கள் கூறி வர
ஏகாந்தம் தீபங்கள்
ஏற்றக் கண்டேன்.
என் எண்ணத்தில்  பாரியதோர்
மாற்றம்  கண்டேன்.

வேண்டாமே  காதலது 
வலிகொடுக்கும்  என்றவன்  நான்.
வீணாகக்  கழிக்கின்ற 
பொழுதென்றும்   சொன்னேன்.
ஆம்  நீங்கள்   விட்டிலென்று  
அடித்துச்  சொன்னேன்.
அடியோடு  காதலினை 
அணுகேன்  நான் என்றேன்.

வேதங்கள்  பல  சொல்லி 
மிடுக்கிக்  கொண்டேன்.
மிடியோடு  சுடிதார்கள் 
வேஷங்கள்  என்றேன்.
பெண்  என்றும்  பேயேதான் 
போகாதே  என்றேன்.
நீ பைத்தியமாய்  சுற்றுவது 
திண்ணம் என்றேன்.

ஏனென்றே சொல்லாமல்
என் நெஞ்சை நீ திருட
பூவாசம் நெஞ்சுக்குள்
மூச்சாகி உயிர் வருட
என் கொள்கைகள் துகள்துகளாய்
உடையக் கண்டேன்.
கொடியே உன் நினைவில் நான்
பொடியாகிப் போனேன்.

அடியே நீ தடி கொண்டு
அடித்தாலும் சரிதான்...
குதிகாலின் கீழ் வைத்து
மிதித்தாலும் சரிதான்...
விதி என்னை பித்தனாக்கி
அழித்தாலும் சரிதான்... - இனி 
என் மூச்சோடு உன்னை நான்
சுமப்பேன் கண்ணே.






Post Comment

2 comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன