எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Wednesday, July 20, 2011

கருவறை ரகசியம்

இறைவா...
உன் படைப்பின்
நுணுக்கங்களை
பார்த்துப் பார்த்துப்
பிரம்மித்துப் போகிறேன்.

ஒரு உயிரின் பிரசவத்துக்குள்
நீ பொத்திவைத்திருக்கும்
காருண்யத்தை
எண்ணிப் பார்த்து
கிறுகிறுத்துப் போகிறேன்.

கண்ணுக்கே தெரியாத
சின்னஞ் சிறிய அணுவொன்றில்
எத்தனை பெரிய உருவத்தை
எப்படிப் புகுத்தினாய்?

ஒரு இருண்ட நீர்க்குடத்துக்குள்
உல்லாசமாய் வாழ்கிறதே
ஒரு பிஞ்சு உயிர் !!

அதை
அள்ளி எடுத்து
மாரோடு அணைத்து
முத்தம் பொழிவது
யாரங்கே ?

அதற்கு,
வெண்ணிலா காட்டி,
ஆடு, மாடு, கோழி என்று
பிராக்குக் காட்டி
அசந்த நேரத்தில் அமுதூட்ட
அங்கே
யார்  இருக்கிறார்கள்?

அந்தக் கருவறைக் குழந்தை
முதல் காற்றை நுகரும் போதே
தாயின் மார்பில்
பொசுக்கென்று தாய்ப்பால்
பொங்கி வழிகிறதே....
இதுவன்றோ
உன் பேரன்பின்
உச்சக்கட்டம்.

ஒரு பிரசவத்துக்குள்ளேயே
இறைவா,
நீ எத்தனையோ  அற்புதங்களை
ஒழித்து வைத்திருக்கிறாய் !!

இறைவா,
உன் பிரம்மாண்டத்தின் காலடியில்
என் ஒவ்வொரு அணுக்களும்
மண்டியிட்டுக் கிடக்கின்றன.


Post Comment

3 comments:

வாஞ்சையுடன் வாஞ்சூர். said...

//RIPHNAS MOHAMED SALIHU சொன்னது…
21 ஜூலை, 2011 9:24 pm
This is really useful. Infact, I was searching for Yoga. //

உங்களுக்கே . உங்களுக்கே. உங்களுக்கே.

தொழுகை

ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் உட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா?

கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தம்.

ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால்.

அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

தொழுகை சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை , உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.

ஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும் இறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.

இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?

தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,

நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பலன் பெற்று விடுகிறார்.

பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.

இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.

தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

இதையெல்லாம் படித்துவிட்டு தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.

தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை.

தொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.


தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.


வாஞ்சையுடன் வாஞ்சூர்.
வாஞ்சையுடன் வாஞ்சூர்.

நாவலந்தீவு said...

//இறைவா... உன் படைப்பின்
நுணுக்கங்களை பார்த்துப் பார்த்துப்
பிரம்மித்துப் போகிறேன் //

உங்கள் கவித்திறத்தை எண்ணி யாம் பிரமிக்கிறோம்.

கவிதை அருமை.... வாழ்த்துக்கள் தோழி

RIPHNAS MOHAMED SALIHU said...

நன்றி நண்பா.. உங்கள் ஆதரவு இன்னும் என்னை எழுதத் தூண்டுகிறது.

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன