கனவுகள் பருகும் காலம்
கவிதையில் உருகும் காலம்
மனதினுள் அருவியொன்று
மடைதிறந் தோடும் காலம்
விழிகளில் மீன்கள் நீந்தும்
வழிகளில் மான்கள் ஓடும்
துறு துறு வென்று நெஞ்சு
தேடலில் தொலையும் காலம்
அறிவுரை வெறுக்கும் காலம்
ஆணைகள் உடைக்கும் காலம்
எதிரியும் நண்பனென்று
உறவிலே துய்க்கும் காலம்
மனதினுள் பட்டாம் பூச்சி
சிறகுகள் விரிக்கும் காலம்
மலரினை மேயும் வண்டை
மகிழ்வுடன் ரசிக்கும் காலம்
கிளைகளில் காற்று ஏறும்
அசைவிலே கரையும் காலம்
குயில்களின் பாட்டு பரவும்
திசைகளில் உறையும் காலம்
இதழிலே நகைகள் ஏற்றி
இமைகளில் அமிர்தம் ஊற்றி
மழையிலே நனைந்துகொண்டே
நகர்ந்திடும் இளமைக் காலம்
கவிதையில் உருகும் காலம்
மனதினுள் அருவியொன்று
மடைதிறந் தோடும் காலம்
விழிகளில் மீன்கள் நீந்தும்
வழிகளில் மான்கள் ஓடும்
துறு துறு வென்று நெஞ்சு
தேடலில் தொலையும் காலம்
அறிவுரை வெறுக்கும் காலம்
ஆணைகள் உடைக்கும் காலம்
எதிரியும் நண்பனென்று
உறவிலே துய்க்கும் காலம்
மனதினுள் பட்டாம் பூச்சி
சிறகுகள் விரிக்கும் காலம்
மலரினை மேயும் வண்டை
மகிழ்வுடன் ரசிக்கும் காலம்
கிளைகளில் காற்று ஏறும்
அசைவிலே கரையும் காலம்
குயில்களின் பாட்டு பரவும்
திசைகளில் உறையும் காலம்
இதழிலே நகைகள் ஏற்றி
இமைகளில் அமிர்தம் ஊற்றி
மழையிலே நனைந்துகொண்டே
நகர்ந்திடும் இளமைக் காலம்
2 comments:
அறிவுரை வெறுக்கும் காலம்
ஆணைகள் உடைக்கும் காலம்
எதிரியும் நண்பனென்று
உறவிலே துய்க்கும் காலம்
good and real .My next poem heading The samme...
Vetha.Elangathilakam.
http://kovaikkavi.wordpress.com
Thank u... And let me know when u do it..
Post a Comment
மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன