எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Saturday, May 14, 2011

இரவின் குளுமை

இந்த
இராத்திரிப் பொழுதின்
ரம்மியமான
நிசப்தத்தில்
பனித்துளிகளும்
புல்வெளிகளும்
செய்து கொள்கின்ற
இரகசிய ஒப்பந்தத்தை
ஒற்றை நட்சத்திரமே,
நீ -
எனக்கு
மொழிபெயர்த்துச்
சொல்லமாட்டாயா? 


2005

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன