என்னை
இந்த உலகத்தின்
எந்தப் பொருளாலும்
எந்த உயிராலும்
திருப்திப்படுத்த
முடியவில்லை.
என் பார்வையில்
இந்த உலகமே
அர்த்தமற்றதாய்த்
தெரிகிறது.
நான்
எனக்கு வெளியே நின்று
என்னை
எட்டிப் பார்க்கும் போது
நானே
பூஜ்ஜியமானவளாய்த்
தெரிகிறேன்.
என் உள்மனத்தின்
உணர்ச்சிகள்
நான் என்ற
வெறுமைக்குள்
வாழ முடியாமல்
தவித்துக் கொண்டிருக்கின்றன .
எனக்குள்ளே
ஏகப்பட்ட முரண்பாடுகள் .
என்னை எனக்கு
புரிந்துகொள்ளத் தெரிகிறது.
புதுப்பித்துக் கொள்ளத்தான்
தெரியவில்லை .
இப்படியே ,
செல்லரித்துப்போன
என் வாழ்க்கையில்
திருத்தங்கள் எதுவும்
நிகழ்த்தப்படாவிட்டால்
காலத்தோடு நானும்
கரைந்து
காணாமல் போய்விடுவேன் .
எனக்கு
வாழ்க்கை பிடிக்கவேயில்லை .
காற்றின் திசையோடும்
அலைகளின் திசையோடும்
அலைந்து அலைந்து
என் வாழ்க்கைப் படகு
தள்ளாடிக்கொண்டிருக்கிறது .
அடர்த்தியான ஒரு காற்றில்
இந்தப் படகு
மூழ்கி
மூச்சுத் திணறத்தான் போகிறது .
நம்பிக்கை என்னும்
துடுப்புகள் கொடுத்து
அதை
நிமிர்த்தி வைக்கவேண்டும் .
பல
அலைகளோடும்
புயல்களோடும்
போராடிக்கொண்டு
முயற்சியுடன் அது
முன்னேற்றம் காணவேண்டும் .
2004
இந்த உலகத்தின்
எந்தப் பொருளாலும்
எந்த உயிராலும்
திருப்திப்படுத்த
முடியவில்லை.
என் பார்வையில்
இந்த உலகமே
அர்த்தமற்றதாய்த்
தெரிகிறது.
நான்
எனக்கு வெளியே நின்று
என்னை
எட்டிப் பார்க்கும் போது
நானே
பூஜ்ஜியமானவளாய்த்
தெரிகிறேன்.
என் உள்மனத்தின்
உணர்ச்சிகள்
நான் என்ற
வெறுமைக்குள்
வாழ முடியாமல்
தவித்துக் கொண்டிருக்கின்றன .
எனக்குள்ளே
ஏகப்பட்ட முரண்பாடுகள் .
என்னை எனக்கு
புரிந்துகொள்ளத் தெரிகிறது.
புதுப்பித்துக் கொள்ளத்தான்
தெரியவில்லை .
இப்படியே ,
செல்லரித்துப்போன
என் வாழ்க்கையில்
திருத்தங்கள் எதுவும்
நிகழ்த்தப்படாவிட்டால்
காலத்தோடு நானும்
கரைந்து
காணாமல் போய்விடுவேன் .
எனக்கு
வாழ்க்கை பிடிக்கவேயில்லை .
காற்றின் திசையோடும்
அலைகளின் திசையோடும்
அலைந்து அலைந்து
என் வாழ்க்கைப் படகு
தள்ளாடிக்கொண்டிருக்கிறது .
அடர்த்தியான ஒரு காற்றில்
இந்தப் படகு
மூழ்கி
மூச்சுத் திணறத்தான் போகிறது .
நம்பிக்கை என்னும்
துடுப்புகள் கொடுத்து
அதை
நிமிர்த்தி வைக்கவேண்டும் .
பல
அலைகளோடும்
புயல்களோடும்
போராடிக்கொண்டு
முயற்சியுடன் அது
முன்னேற்றம் காணவேண்டும் .
2004
No comments:
Post a Comment
மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன