எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Sunday, May 22, 2011

உயிர் தொடா வலிகள்

மனசு
ரணமாய்
கிழிக்கப்பட்ட
பொழுதுகளில்
கண்ணீரைப் போல
கவிதையும் வருமா?

ஏனோ,

பூதாகரமாய்த்
தோன்றும்
வாழ்க்கைப் புதரில்
எனக்கு
பூப்பறிக்கும்
எண்ணம் வந்தது.

உணர்வுகளில்

ஏமாற்ற
முட்களின்
எத்தனையோ
கிழிசல்கள்.

பனித்துளிகளாய்

இரத்தச்
சொட்டுக்கள்
படர்ந்திருக்கும்
அபாயப் புல்வெளிகளில்
அலைமோதுகிறது
வாழ்க்கை.

இந்தப்

புரட்சிக்  களத்துக்கு
அப்பாலும்,
இந்த வன்முறைகள்
குத்திப் பெயர்த்துவிடாத
மனதின் ஆழத்தில்
சின்னதாய்
ஒரு -
நம்பிக்கை
ஒளிக்கீற்று
காரிருளில்
மின்மினிப் பூச்சியின்
வெளிச்சமாய்.

அதுதான்

என் கண்ணீரை
கவிதையாய்
மொழிபெயர்க்கும். 


2005

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன