எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Thursday, May 26, 2011

பெயர் மாற்றம் - 'SOCIAL BIRD' 'நிழல் பூக்கள்' ஆகிறது.

என் வலைப் பதிப்பில் சில மாற்றங்களை செய்துள்ளேன். அழகான தமிழ் மொழியில் ஆக்கங்கள் செய்யும் நாம் எதற்காக ஆங்கிலத்தில் பெயர் வைத்தோம் என்று ஒரு உறுத்தல் இருந்தது. இப்போது அந்த உறுத்தல் போய் விட்டது. நான் ஒரு கனவுலகத்தில் வாழ்பவள் என்பதால் இந்த ' நிழல் பூக்கள்' என்னும் பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். உண்மையில் நிழல்கள் என்றுதான் பெயர் வைக்க நினைத்தேன். ஆனால் யாரோ ஒருவர் எனக்கு முந்தி அந்தப் பெயரை வைத்துவிட்டதால் அந்தப் பெயர் எனக்கு மறுக்கப்பட்டு விட்டது. இருந்தாலென்ன, இந்தப் பெயர் கூட அழகாய்த்தான் இருக்கிறது. போதாக்குறைக்கு என் உணர்வுகளை பூக்கள் என்று வேறு சொல்கிறது. என் மென்மையான உணர்வுகளை பூக்கள் என்று சொல்வதும் பொருத்தமாய்த்தான் இருக்கிறது. அதனால் இந்தப் பெயரை நான் நேசிக்கிறேன். இப்படியொரு பெயரோடு என் உணர்வுகள் பயணிப்பது பெருமையாய் இருக்கிறது.
அது சரி, நான் மட்டும்  பெருமைப்பட்டுக் கொண்டிருந்தால் சரியாகுமா? என் உணர்வுகளில் இளைப்பாறிவிட்டு கட்டாயம் உங்கள் கருத்துக்களையும் பொறித்து விட்டுப் போங்கள். என்னப்பா இது, ஒருத்தரும் கருத்திடவில்லை, நான் எழுதுவது கவிதையே இல்லையா அல்லது மற்றவருக்கு புரியும்படியாய் இல்லையா என்ற எண்ணம் கூட அடிக்கடி தோன்றுகிறது. எப்படியோ, என் உணர்வுகளின் உந்துதலால் எதையும் எதிர்பார்க்காமல் எழுதிக் கொண்டிருக்கிறேன், என்றைக்கோ ஒருநாள் எனக்கான அங்கீகாரம் கிடைக்குமென்ற நம்பிக்கையில் இந்த நிழல்  பூக்கள் கவிதைத் தேனை சிந்திக்கொண்டிருக்கிறது. அருந்திப் பாருங்கள். என்னது, கவிதையே இல்லையென்றால் அதையும் சொல்லிவிடுங்கள்.

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன