உன்னில் எனக்கு
என்ன பிடித்தது?
உன்
அலட்சியப் போக்கா?
அன்றேல்
அழகிய மூக்கா?
என்னைத் தவிர
எல்லாரையும்
நீ -
பார்த்துச் சிந்தும்
புன்னகைக் கீற்றா ?
என்னுடைய
விழிகளை
காந்தமாகக்
கவர்ந்து கொள்ளும்
உன் கனல் விழிகளின்
தாக்குதல்களிலிருந்து
தவிர்ந்துகொள்ள முடியாமல்
தவித்துக்கொண்டிருக்கிறது
மனது.
போதும்.
இந்த வன்முறைகளை
நிறுத்திவிடு.
உனக்காகக்
காத்திருந்து
இதயம்
களைத்துப்போய்விட்டது .
ஒரே ஒரு புன்னகையால்
என் உயிரின்
தேடல்களுக்கெல்லாம்
முன்னுரை எழுது .
என் வாழ்க்கையின்
பள்ளமான
பகுதிகளை
உன் பாசத்தால்
நிரப்பிவிடு .
வா...
நம் சங்கீதச்
சிரிப்பொலிகளில்
இந்த
சாலை மரங்களெல்லாம்
ஸ்வரங்களைக்
கற்றுக்கொள்ளட்டும் .
என் தேடல்கள்
தீர்ந்துவிடுமுன்
என் பாடல்கள்
ஓயந்துவிடுமுன்
உன்
மௌனத் தவத்தை
கலைத்து விட்டு
உன்
இதயத்தை
எனக்குள்ளே
ஒலிபரப்பிவிடு.
2005
என்ன பிடித்தது?
உன்
அலட்சியப் போக்கா?
அன்றேல்
அழகிய மூக்கா?
என்னைத் தவிர
எல்லாரையும்
நீ -
பார்த்துச் சிந்தும்
புன்னகைக் கீற்றா ?
என்னுடைய
விழிகளை
காந்தமாகக்
கவர்ந்து கொள்ளும்
உன் கனல் விழிகளின்
தாக்குதல்களிலிருந்து
தவிர்ந்துகொள்ள முடியாமல்
தவித்துக்கொண்டிருக்கிறது
மனது.
போதும்.
இந்த வன்முறைகளை
நிறுத்திவிடு.
உனக்காகக்
காத்திருந்து
இதயம்
களைத்துப்போய்விட்டது .
ஒரே ஒரு புன்னகையால்
என் உயிரின்
தேடல்களுக்கெல்லாம்
முன்னுரை எழுது .
என் வாழ்க்கையின்
பள்ளமான
பகுதிகளை
உன் பாசத்தால்
நிரப்பிவிடு .
வா...
நம் சங்கீதச்
சிரிப்பொலிகளில்
இந்த
சாலை மரங்களெல்லாம்
ஸ்வரங்களைக்
கற்றுக்கொள்ளட்டும் .
என் தேடல்கள்
தீர்ந்துவிடுமுன்
என் பாடல்கள்
ஓயந்துவிடுமுன்
உன்
மௌனத் தவத்தை
கலைத்து விட்டு
உன்
இதயத்தை
எனக்குள்ளே
ஒலிபரப்பிவிடு.
2005
No comments:
Post a Comment
மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன