எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Saturday, May 14, 2011

ஒரு வார்த்தை பேசு.

உன்னில் எனக்கு
என்ன பிடித்தது?

உன்
அலட்சியப்  போக்கா?
அன்றேல்
அழகிய மூக்கா?

என்னைத் தவிர
எல்லாரையும்
நீ -
பார்த்துச் சிந்தும்
புன்னகைக் கீற்றா ?

என்னுடைய
விழிகளை
காந்தமாகக்
கவர்ந்து கொள்ளும்
உன் கனல் விழிகளின்
தாக்குதல்களிலிருந்து
தவிர்ந்துகொள்ள  முடியாமல்
தவித்துக்கொண்டிருக்கிறது
மனது.

போதும்.
இந்த வன்முறைகளை
நிறுத்திவிடு.

உனக்காகக்
காத்திருந்து
இதயம்
களைத்துப்போய்விட்டது .

ஒரே  ஒரு  புன்னகையால் 
என்   உயிரின் 
தேடல்களுக்கெல்லாம் 
முன்னுரை   எழுது  .

என்  வாழ்க்கையின் 
பள்ளமான 
பகுதிகளை 
உன் பாசத்தால் 
நிரப்பிவிடு  .

வா...
நம்   சங்கீதச் 
சிரிப்பொலிகளில் 
இந்த
சாலை  மரங்களெல்லாம் 
ஸ்வரங்களைக் 
கற்றுக்கொள்ளட்டும்  .

என் தேடல்கள்
தீர்ந்துவிடுமுன்
என் பாடல்கள்
ஓயந்துவிடுமுன்
உன்
மௌனத் தவத்தை
கலைத்து விட்டு
உன்
இதயத்தை
எனக்குள்ளே
ஒலிபரப்பிவிடு.


2005

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன