எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Tuesday, May 10, 2011

ஞாபகங்கள்

என் ஞாபகங்கள்
என் இறந்தகாலத்தின்
இடிந்து விழுந்த
சுவர்களூடே
எட்டிப் பார்க்கின்றன.

காரணமே தெரியாமல்- நான்
கண்ணீர் விட்டழுத
அந்த
ஈரப்பொழுதுகளை - அவை
தடவிப்  பார்க்கின்றன.

என்னைச் சுற்றி
நான் பின்னிக்கொண்ட
அந்த சோக வலைகளிலே
அவை
சிக்கித் தவிக்கின்றன.

யாருக்கும் தெரியாமல்
என்
கண்ணீர் நதி
வடிந்தொழுகும் போது
எனைத் தாங்கிக்கொண்ட
கற்குவியலில்
அவை
மீண்டுமொருமுறை
கண்ணயர்ந்து போகின்றன.


2011

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன