எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Thursday, May 26, 2011

மனசாட்சி

என்னோடு
வாயாடும்
என்னுடைய
குரல்கள்.

என் விழியைக்

குத்தும்
என்னுடைய
விரல்கள்.

என்னையே

சுடுகின்ற
என்னுடைய
கனல்கள்.

என் கன்னத்தில்

அறைகின்ற
என்னுடைய
கைகள்.

என் தட்டில் உண்டு,

என் சட்டை போட்டு,
என் கட்டிலில்
புரண்டுகொண்டு,..
என் மார்பிலேயே
எட்டி உதைக்கும்
என்னுடைய மனசாட்சி.

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன