எப்போதாவது
வந்துவிட்டுப் போகும்
உன் ஞாபகங்கள்
ஒரு
விருந்தாளிபோல.
நம்
மௌனங்கள்
பேசிச் சிரித்து
புளகித்துக்கொண்ட
அந்த
வசந்தகாலத்தின்
வாசனை
எப்போதாவது-
என்னை வந்து
உரசிவிட்டுப் போகும்.
பார்வைகள்
பரிமாறிக்கொண்ட
ஆயிரம்
வார்த்தைகள்- அவ்வப்போது
மயிலிறகால்
என் நெஞ்சை
வருடிவிட்டுப் போகும்.
பிரிவென்னும் காட்டில்
நாம்
வழிமாறும் போது
வார்த்தைகளை முழுங்கி
முந்திக்கொண்டு வந்த
நம்
கண்ணீர்த்துளிகளின் ஈரம்
எப்போதாவது வந்து
என்
கண்ணோரங்களில்
கசிந்துவிட்டுப் போகும்.
2011
வந்துவிட்டுப் போகும்
உன் ஞாபகங்கள்
ஒரு
விருந்தாளிபோல.
நம்
மௌனங்கள்
பேசிச் சிரித்து
புளகித்துக்கொண்ட
அந்த
வசந்தகாலத்தின்
வாசனை
எப்போதாவது-
என்னை வந்து
உரசிவிட்டுப் போகும்.
பார்வைகள்
பரிமாறிக்கொண்ட
ஆயிரம்
வார்த்தைகள்- அவ்வப்போது
மயிலிறகால்
என் நெஞ்சை
வருடிவிட்டுப் போகும்.
பிரிவென்னும் காட்டில்
நாம்
வழிமாறும் போது
வார்த்தைகளை முழுங்கி
முந்திக்கொண்டு வந்த
நம்
கண்ணீர்த்துளிகளின் ஈரம்
எப்போதாவது வந்து
என்
கண்ணோரங்களில்
கசிந்துவிட்டுப் போகும்.
2011
No comments:
Post a Comment
மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன