எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Tuesday, May 10, 2011

மறக்கத் தெரியவில்லை.

எப்போதாவது
வந்துவிட்டுப்  போகும்
உன்  ஞாபகங்கள்
ஒரு
விருந்தாளிபோல.

நம்
மௌனங்கள்
பேசிச் சிரித்து
புளகித்துக்கொண்ட
அந்த
வசந்தகாலத்தின்
வாசனை
எப்போதாவது-
என்னை வந்து
உரசிவிட்டுப் போகும்.

பார்வைகள்
பரிமாறிக்கொண்ட
ஆயிரம்
வார்த்தைகள்- அவ்வப்போது 
மயிலிறகால்
என் நெஞ்சை
வருடிவிட்டுப் போகும்.

பிரிவென்னும் காட்டில்
நாம்
வழிமாறும் போது
வார்த்தைகளை முழுங்கி
முந்திக்கொண்டு வந்த
நம்
கண்ணீர்த்துளிகளின்  ஈரம்
எப்போதாவது  வந்து
என்
கண்ணோரங்களில் 
கசிந்துவிட்டுப் போகும்.


2011

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன