எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Sunday, May 22, 2011

நீளுகின்ற பயணங்கள்

ஒரு  முடிச்சுக்குள்ளிருந்து 

அவிழ்த்து  
எறியப்பட்டு
வீதியில் 

விழுந்தபோது
புதுப் பயணங்கள்
தொடர்ந்தேன்.

என் பாதையின்
நீளம்
தெரிந்திருந்தும்
ஒரு
நப்பாசையுடன்
பயணித்துப் பார்த்தேன்.

இப்போது,
என் பாதைகள்
முடிந்துபோயின.
என்
நிறைவு பெறாத 
பயணங்கள் மட்டும்
நிராதரவாக.

முடியவில்லை.
என் பாதை தெரியாத
பயணங்களை
நிறைவு செய்ய
முடியவில்லை.

எனக்குள்ளிருந்து 
என்னை
சுழற்றிவிடும்  
ஏதோ ஒரு உணர்வின்
உந்துதலால்
என்னால்
ஓய்ந்திருக்க  
முடியவில்லை.

சந்துகளிலும்
பொந்துகளிலும்
என் சக்கரங்கள்
எதையோ தேடி
சுழன்றுகொண்டிருக்கின்றன.   

2004

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன