எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Thursday, May 19, 2011

தீபமா? தீப்பிழம்பா?

எனக்குள்ளே
எரிந்துகொண்டிருப்பது
என்ன?
தீபமா?
தீப்பிழம்பா?

தீபம்

அமைதியானது.
தன் ஒளியால்
பிறரையும்
பிறர்  சந்தோஷத்தில்
தன்னையும்
திருப்திப்படுத்திக் கொள்கிறது.

தீப்பிழம்பு

நொடிப் பொழுதில்
ஒரு
யுகப் புரட்சியையே
நிகழ்த்தி  முடிக்கிறது.

தீபம் -

ஒரு புள்ளியிலிருந்து
உலகத்தை
எட்டிப் பார்க்கிறது.

தீப்பிழம்பு -

உலகத்தின்
பார்வையையே
ஒரு புள்ளியில் குவிக்கிறது.

தீபம் -
சிலவேளைகளில்
என் மூச்சுக் காற்றிலேயே
மூச்சுத் திணறுகிறது.


தீப்பிழம்பு-

என் மூச்சின்
வெப்பத்தையும்
சேர்த்துக் கொண்டு
முன்னேறிப் போகிறது.

தீபம்

இருளுக்கு
ஒளி கொடுக்கிறது.

தீப்பிழம்பு-

சிலவேளைகளில்,
ஒளியைக் கூட
இருட்டாக்கி விடுகிறது.

நான்,

தீபமாயிருப்பதா?
தீப்பிழம்பாயிருப்பதா? 


2005 

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன