இந்தப் பேனா!
இதுதான்
என்னை -
எழுத்துக் கடலுக்குள்
அமிழ்த்தி எடுப்பது .
ஒன்று சொன்னால்
ஆச்சரியப்படுவீர்கள் .
என் மூளையை விடவும்
அதிகமாய்ச் சிந்திப்பது
என் பேனா முனைதான் .
பேனாவின் மூடி திறக்கும்வரை
நானொரு
ஞானசூன்யம்.
காகிதமும் என் பேனாமுனையும்
கை குலுக்கிக் கொண்டபின்தான்
என் அறிவும் ஹோர்மோன்களும்
சுரந்துகொள்கின்றன.
சிலவேளைகளில்
எனக்குக் கவிதை வரும்.
ஆனால்,
எழுத வராது.
சிலவேளைகளில்
எனக்கு எழுத வரும்.
ஆனால்,
கவிதை வராது .
கவிதையும் எழுத்தும்
ஒன்றாய் வரும்போது
இந்தப் பேனாமுனைதான்
என் உணர்ச்சிகளை
சாறு பிழியும்.
அந்தத்
துளித் துளிகள்தான்
கவித் துளிகளாய்
மொழி மாறும் .
2002
No comments:
Post a Comment
மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன