எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Monday, May 16, 2011

எனக்கான வானம்

என் சாலைகளில் 
பல
நறுமண  மலர்கள் .

நான்

நடக்கும்  போது
என் மீது
பன்னீர்  தெளிப்பதற்காகவே
இந்த
மரஞ்  செடி  கொடிகளெல்லாம்
இராத்திரிப்   பனியில்
யாகம்  செய்கின்றன .

என்

இதழ்கள்  சிந்தும்
சிரிப்பின் சந்தத்தைத்தான் 
சங்கீதமாக்கி
அந்தப்  புல்லாங்குழல்
உங்கள்
காதுகளுக்குள்
கிசு  கிசுக்கின்றன .

என்
பாதச் சுவடுகள்
பதிந்த
மணல்களில்தான்
இந்த நதிகளெல்லாம்
புரண்டு  வந்து
தங்களை
புனிதப்படுத்திக் கொள்கின்றன .

என் விழியசைவின்
வழிகாட்டலில்தான்
நட்சத்திரங்கள்
நடந்து  செல்கின்றன .

நான்
துயில்  கொள்ள  வேண்டும்
என்பதற்காகத்தான்
சந்திரனை  எனக்கு
தாலாட்ட
அனுப்பிவிட்டு
அந்த
அந்திச்  சூரியன்
இரவு  முழுவதும்
இருட்டுத்  தவம்
புரிகின்றான் .

வானம்  பரந்ததும்,
பூமி  விரிந்ததும், 

மலைகள்   வளர்ந்ததும்,
நதிகள் வளைந்ததும், 
எல்லாமே  எல்லாமே
எனக்காகத்தான்.

இறைவன் என்னை
ஆசீர்வதித்து
அனுப்பி வைத்தான். 



2005


Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன