என் சாலைகளில்
பல
நறுமண மலர்கள் .
நான்
நடக்கும் போது
என் மீது
பன்னீர் தெளிப்பதற்காகவே
இந்த
மரஞ் செடி கொடிகளெல்லாம்
இராத்திரிப் பனியில்
யாகம் செய்கின்றன .
என்
இதழ்கள் சிந்தும்
சிரிப்பின் சந்தத்தைத்தான்
சங்கீதமாக்கி
அந்தப் புல்லாங்குழல்
உங்கள்
காதுகளுக்குள்
கிசு கிசுக்கின்றன .
என் பாதச் சுவடுகள்
பதிந்த
மணல்களில்தான்
இந்த நதிகளெல்லாம்
புரண்டு வந்து
தங்களை
புனிதப்படுத்திக் கொள்கின்றன .
என் விழியசைவின்
வழிகாட்டலில்தான்
நட்சத்திரங்கள்
நடந்து செல்கின்றன .
நான்
துயில் கொள்ள வேண்டும்
என்பதற்காகத்தான்
சந்திரனை எனக்கு
தாலாட்ட
அனுப்பிவிட்டு
அந்த
அந்திச் சூரியன்
இரவு முழுவதும்
இருட்டுத் தவம்
புரிகின்றான் .
வானம் பரந்ததும்,
பூமி விரிந்ததும்,
மலைகள் வளர்ந்ததும்,
நதிகள் வளைந்ததும்,
எல்லாமே எல்லாமே
எனக்காகத்தான்.
இறைவன் என்னை
ஆசீர்வதித்து
அனுப்பி வைத்தான்.
2005
பல
நறுமண மலர்கள் .
நான்
நடக்கும் போது
என் மீது
பன்னீர் தெளிப்பதற்காகவே
இந்த
மரஞ் செடி கொடிகளெல்லாம்
இராத்திரிப் பனியில்
யாகம் செய்கின்றன .
என்
இதழ்கள் சிந்தும்
சிரிப்பின் சந்தத்தைத்தான்
சங்கீதமாக்கி
அந்தப் புல்லாங்குழல்
உங்கள்
காதுகளுக்குள்
கிசு கிசுக்கின்றன .
என் பாதச் சுவடுகள்
பதிந்த
மணல்களில்தான்
இந்த நதிகளெல்லாம்
புரண்டு வந்து
தங்களை
புனிதப்படுத்திக் கொள்கின்றன .
என் விழியசைவின்
வழிகாட்டலில்தான்
நட்சத்திரங்கள்
நடந்து செல்கின்றன .
நான்
துயில் கொள்ள வேண்டும்
என்பதற்காகத்தான்
சந்திரனை எனக்கு
தாலாட்ட
அனுப்பிவிட்டு
அந்த
அந்திச் சூரியன்
இரவு முழுவதும்
இருட்டுத் தவம்
புரிகின்றான் .
வானம் பரந்ததும்,
பூமி விரிந்ததும்,
மலைகள் வளர்ந்ததும்,
நதிகள் வளைந்ததும்,
எல்லாமே எல்லாமே
எனக்காகத்தான்.
இறைவன் என்னை
ஆசீர்வதித்து
அனுப்பி வைத்தான்.
2005
No comments:
Post a Comment
மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன