எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Sunday, May 29, 2011

கனவுப் பூ

ஒரு புன்னகை தேசத்தில்
பூவொன்று பூத்தது.

பூங்காற்றின் மோதல்களில்
புதுப்பாடம் கற்றது.

காற்றின் அதிர்வுகளில்
கானங்கள் பயின்றது.

காலைத் தென்றலோடு
கை கோர்த்து நடந்தது.

வானத்தின் கோலத்தில்
வண்ணங்கள் அழைந்தது.


வானவில்லில் ஊஞ்சல் கட்டி
வானத்தை அளந்தது.

விண்மீனை எண்ணித்தான்
எண்கணிதம் வளர்த்தது.

விஞ்ஞானம் தெரிந்து கொள்ள
விண்ணோடு சுழன்றது.

நிலவிலே இறகு கட்டி
நெடுவானில் பறந்தது.

இரவின் பனித்துளியில்
இமை கவிழ மறந்தது.

அலைகளின் நுரைகளிலே
கலையமுது பருகியது.

இலைகளின் கரைகளிலே
இருவிழிகள் மருவியது.

நிலவொழுகும் இரவுகளை
நிலை மறந்து ரசித்தது.

மழை பொழியும் நினைவுகளில்
நீராடிக் களித்தது.

இயல் இசை கற்றதெல்லாம்
இயற்கையின் மடியில்தான் - இந்தக்

கயல் விழி பூத்ததெல்லாம்
கனவுகளின் கொடியில்தான்.

அழகான கொடிகளிலே
இடம் மாறும் இந்தப் பூ.

எழில் கொஞ்சும் இயற்கையோடு
துயில் கொள்ளும் வஞ்சிப் பூ.

இவள் ஒரு கனவுப் பூ - இவளுக்கு
நிஜவுலகம் வேப்பம் பூ.


Post Comment

2 comments:

ம.தி.சுதா said...

அருமையான வரிகள்..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

RIPHNAS MOHAMED SALIHU said...

நன்றி அண்ணா

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன